Wednesday 9 July 2014

Story 53: மன்னிச்சிடுங்க



மன்னிச்சிடுங்க
எதார்த்தம்  எதிர்பார்ப்புக்கும்  உள்ள தூரம்  தெரியும் போது  எதார்த்தம் எதிர்பார்ப்பாகிறது
கருப்பு  வெள்ளை    கனவு  கூட  எதிர்ப்பார்ப்பின்  பிம்பங்களில்  வண்ணங்களின்  தேசமாகிறது  என்று  சொல்லும்  ஆறாம்  விரலின்  சொந்தக்காரி என் பெயர்  மதி
 தென் மாவட்டத்தில் வறட்சி ளையும்  விறகுக்கு உதவும்னு  விதைச்ச காற்றிலுள்ள  தண்ணியையும் உறிஞ்ச  கருவேலமரம்  நீறைஞ்ச  கரிசக்காடு  நான்  அம்மா   அப்பா   அக்கா  தம்பி  அப்பா  முடித் திருத்தம்  நடத்துறார்  அதுல குடும்பம் நடத்த  போதாது  என்பதால  அம்மா  தீப்பட்டி  ஆபீஸ்    வேலை பாத்தாங்க  எங்கள  நல்ல  படிச்சு  பெரிய  ஆள அவங்களோட  கனவுபக்கத்துல  டவுன்ல  ஸ்கூல்  படிக்க  வச்சாங்க  அக்கா  சுமாரா  படிப்பா  அம்மா  கூட  ஒத்தாசையா இருப்பா  நான்  ஸ்கூல்  பஸ்ட்   விளையாட்லையும்   பஸ்ட்   எந்தக்குறையும்  சந்தோசமாக  வருடங்கள்  வருடி  சென்றன .அக்கா  வயதுக்கு  வந்தவுடன்  பள்ளிக்கூடம்  போககூடாதுன்னு  சொந்தம்  எல்லாம் சொல்ல அப்பா  சம்மதிச்சாலும்  அம்மா அரை மனதார  ஏற்கவேண்டிய  நிர்பந்தம் ,நான்  பத்தாம்  கிளாஸ் படிக்கும் போது அம்மா  அப்பா  வேலைக்கு  போன சமயத்துல  அக்காவும் சொந்தகாரர்  பழகுறதா  புரளி  பேசுனது  ஊர், நம்ம  பெத்த பிள்ளையை  சந்தேகபடக்கூடாதுன்னு  அக்கா  கிட்ட  இதை  பத்தி  பேசல , நாளாக  நாளாக  உறவுகளின்  நச்சரிப்பாலும்  அப்பா  ஒரு நாள்  தற்செயலாக  அக்காவை  வேறொருவருடன்  கோவிலில்  பார்க்க ,அதை  யாரிடமும்  வெளிகாட்டாமல்  மதுரையில்  உள்ள   சொந்தக்காரர்   மூலமாக  மாப்பிள்ளை  பார்த்து  கல்யாணம்  முடிவானது  ஆனால்  அக்கா  அவள்  விரும்பியவருடனே  ஓடி  போய்  கல்யாணம்  பண்ணிக்கிட்டு  வந்தாள்  .சொந்தம்  முழுவதும்  வசை பாட  நானும்  தம்பியும்  என்ன பண்றதுன்னு  தெரியாம  முழிக்க  அவமானம்  தாங்க முடியாம  அம்மாவும் அப்பாவும் தற்கொலைக்கு  முயற்சி  பண்ண  சொந்தகாரங்க  தடுத்துட்டாங்க  அக்காவும்  அவரோட  ஊர  விட்டு  போய்ட்டாங்க  நான்  பத்தாம்  கிளாஸ்   மாவட்டம்  முதல்ல  வந்தேன்   அந்த சந்தோசத்தில   கவலைய  மறந்தாங்க ,11 ம்  கிளாஸ் 12 ம்  கிளாஸ் மாவட்டம்  முதல்ல வந்தேன் .எல்லோரும்  சந்தோசமா  இருந்தாங்க   நான்  கம்ப்யூட்டர்  என்ஜினீரிங்  படிக்கேன்  சொன்னவுடன் அப்பா  வேண்டாம்  சொல்ல  சொந்தம்  எல்லாம்  கல்யாணம்  பண்ண  முடிவு  பண்ண  என்னோட  பிடிவாதமும்  சாப்பிடாம  அடம்  பிடிச்சதால  அம்மா     சம்மமதிச்சு  அப்பா  கிட்ட சொல்ல இவளும்  எவனையாவது  கல்யாணம்  பண்ணி  வந்து  நின்னா  என்ன  பண்றது  கேட்க  என்ன சந்தேகப்படுறிங்கள  அம்மா  அப்பா  அக்கா  பண்ணதுக்கும்  எனக்கும்  என்ன  சம்மந்தம்  எனக்கு  மெரிட்    சீட்  கிடைச்சிருக்கு நம்பிக்கையோடு  அனுப்புங்க  அப்பா கெஞ்ச  அப்பா  சம்மதத்துடன்   காலேஜ்  சேர்ந்தேன்   தமிழ்   மீடியம்  படிச்சதால      என்ஜினீரிங்  இங்க்லீஸ்  எல்லாமே  இருந்ததால  பர்ஸ்ட்  செமஸ்டர்   கஷ்டப்பட்டாலும்  அதன்  பிறகு  பாலோ  பண்ணிகிட்டனால  அடுத்தடுத்த  செமஸ்டர்  பர்ஸ்ட் கிளாஸ்  எடுத்தேன்  ரெண்டு  மாசத்துக்கு  ஒரு  தடவை  ஊருக்கு  போய்ட்டுவருவேன் பிரெண்ட்ஸ்  தனிப்பட்டு  யாரும்  இல்லை ஹாஸ்டல்  இருக்கறதுனால எல்லோரும்  ஒண்ணுக்குள்ள  ஒன்ணா  இருப்போம்  வாரவாரம்  சண்டே  ஊர் சுற்றுவோம் .பைனல்  இயர்  ப்ராஜெக்ட்  செய்ய  பிரைவேட்  ப்ராஜெக்ட்   லிமிடெட்  சென்றேன்  அங்குதான்  ஆகாஷ்  ப்ராஜெக்ட்  ஹெல்ப்  பண்ணினார் ,
அம்மா  அப்பா  இறந்துட்டாங்க அக்கா  மட்டும்  தான் இருக்காங்க  அவங்களுக்கும்  கல்யாணம்  ஆகி  போதைக்கு  அடிமை  ஆகீருந்ததால்  டிவோர்ஸ்  பண்ணிட்டாங்க  ஆகாஷ்  சொல்ல இப்படியே  அவருடைய  பழக்கம்   நட்பாக  தொடர்ந்தது ,இந்த சமயத்தில் அக்கா  பெண்  குழந்தை  பிறந்ததாகவும்  அம்மா  வீட்டில்  சேர்த்துக்கொண்டுதாகவும்  தம்பி  போனில்  சொல்ல  ஊருக்கு  சென்றேன்  என்  குடும்பம்  அக்கா  மாமா  குழந்தை  முழுவதும்  சந்தோசமாக  இருந்தது .காலேஜ்   லைப் வும்  முடிஞ்சது    ஊருக்கு  சென்று  நாட்கள் நகர்ந்தன  நான்  என்ஜினீரிங்  பர்ஸ்ட் கிளாஸ்  பாஸ்  ஆனதால  ACS  சாப்ட்வேர்  வேலை  கிடைத்தது  அப்பா  வேண்டாம்  சொல்ல   பேங்க்  லோன்  செட்டில்  ஆகும்  போறேன்  சொல்லி  சென்றேன்  .மீண்டும்  ஆகாஷ் உடன்  நட்பு  தொடர்ந்தது
நாளடைவில்  காதலாய்  மாறியது நானும்ஆகாஷ்  ம்  அவருடைய  அக்காவிடம்  சம்மதம்  வாங்கினோம் .என்  வீட்டில்  யாரும்  சம்மதிக்கவில்லை ,வீட்டில்  பார்க்கும்  மாப்பிள்ளை  வேண்டாம்  என்று  மறுத்துக்கொண்டே  வந்தேன்  .ஆகாஷ் அக்கா  கல்யாணம் பண்ண  சரியாயிடும்  சொல்ல   திருமணம்  செய்து கொண்டோம்    எங்கள்  வீட்டுக்கு   சென்றால்  அப்பா  அம்மா  அமைதியாக  இருக்க  அக்காவும்  தம்பியும்  சண்டை போட்டனர் .நானும் ஆகாஷும்  ஊரை  விட்டு  வந்து  இல்லற  வாழ்க்கை  தொடங்கியது  ,வேலைக்கும்  போக  ஆரம்பிச்சேன்   சம்பளம்   ஆகாஷ்  அக்கா கிட்ட  கொடுத்தேன்  மதி உன்  செலவுக்கு  போக  அப்பா அம்மாவுக்கு  அனுப்ப  சொன்னங்க  .அவங்க  வாங்கமாட்டங்க  அண்ணி  அதனால  நீங்களே  வச்சிருங்கன்னு  கொடுத்தேன் . ஒரு  நாள்  சாப்ட்வேர்  கோடிங்    ஆக  ஆகாஷ்  லேப்டாப்  எடுத்து  ஒன பண்ணி  ப்ரோக்ரம்  முடிச்சேன்  தற்செயலாக  போல்டரை  ஓபன்  செய்தேன்  நானும்  ஆகாஷும்  அந்தரங்கம்  போட்டோ ஆகவும்  வீடியோ  ஆகவும்  அதிர்ந்துவிட்டேன்  மாலை  ஆகாஷ்  வந்தவுடன்  மெதுவாக  கேட்டேன்  லேப்டாப் பெர்மிசன்  இல்லாம  ஏன்  எடுத்தன்  கேட்க ,அர்செண்ட்  வொர்க்  அதனால  எடுத்தேன்   அதை  விடு  ஆகாஷ்  நீ  என்ன  பண்ணியிருக்க  தெரியுமா  அதெல்லாம்  ஒண்ணும்  இல்ல  செல்லம்  உனக்கு  பிடிக்கலையா  அழிச்சிருதேன்  ஓகே  சமாதானம்  செய்தார்  ஆகாஷ்  ,ஒரு  வாரம்  கடந்த  பிறகு  தலைவலி  இருந்ததால்  மதியம்  வீட்டிற்கு  வந்தேன் ,வீடு திறந்து  இருந்தது  ஆண்பெண்  முனங்கல்  சத்தம்  கேட்க  எட்டி  பார்த்தேன்  ஆகாஷும்  அக்காவும்  ஒரே   கட்டிலில்  பார்த்தவுடன்  ஆத்திரத்தில்  கத்த  இருவரும்  எந்த  சலனமும்  இல்லாம வந்து  என்ன  மதி  மிரட்சியா  இருக்கா  நாங்க  அக்கா  தம்பி இல்ல  புருஷன்  பொண்டாட்டி .என்  பர்ஸ்ட் வைப்  , வேலை  செய்யாம  சொகுசா  வாழணும்னு  ஆசைப்பட்டோம்   நீ  எட்டாவது  பொண்டாட்டி  உன்  சம்பளம்  மட்டும்மில்லே  அந்தரங்க   போட்டோ  எல்லாத்தையும்  நெட்  அப்லோட்  சம்பாதிச்சேன் ,இதை  ஏன்  உன்  கிட்ட  சொல்றேன்  பார்க்குரியா  சாவதுக்கு  முன்னாடி  உண்மை  தெரியனும்ல  கட்டையை  ஒங்க  அவ  தடுத்து  கைல  கிடைச்ச  கத்தியால  ரெண்டு  பேரையும்  குத்திட்டு  உண்மையெல்லாம்  சொல்லி  போலீஸ் ஸ்டேஷன்  சரண்  அடைந்தேன் .அம்மா  அப்பா   ஜெயில்ல  வந்து  பார்க்க வார்த்தையெல்லாம்    மௌனத்தில்  பூட்டிக்கொள்ள  கண்ணீர்த்துளியில்  மன்னிப்பு கேட்கிறேன்  என்னை   மன்னிச்சிடுங்க................... ....................

No comments:

Post a Comment